districts

img

அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் காப்பீடு

பொள்ளாச்சி, டிச. 1 - அனைத்து தென்னை மரங் களுக்கும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தென்னை  விவசாயிகள் சங்கத்தின் கோவை  மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு மாநாடு, பொள்ளாச்சி அரிமா சங்கத்தில் நடைபெற்றது.தென்னை விவசாய சங்கத் தின் மாநில துணை தலைவர்   ஏ. காளப்பன் தலைமை தாங்கினார்.  மாநாட்டை துவக்கி வைத்து தமிழ் நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி உரையாற்றினார்.  மாநாட்டை வாழ்த்தி, விவசாய சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங் கோவன் மற்றும் என்.ஆறுச்சாமி, கே. தங்கவேல் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர்.  இதில், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.140 கொள்முதல்  செய்து வழங்க வேண்டும். அனைத்து தென்னை மரங்க ளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். கேரளத்தைப்போல முழு  தேங்காய் கிலோ ரூ50 கூட்டுறவு  மூலம் கொள்முதல் செய்ய  வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவையில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் முன்மொழியப்பட்டது. அமைப்பின் முதல் மாநாட்டில், மாவட்ட தலைவராக ஜி.ராஜா, செய லாளராக ஸ்டாலின் பழனிச்சாமி, பொருளாளராக ஜே.ரவீந்திரன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து, தென்னை விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதணன் உரையைற்றினார். இம் மாநாட்டில் திரளான தென்னை விவ சாயிகள் பங்கேற்றனர்.