districts

பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தினர் போராட்டம்

பவானி தாலுகா, ஓடாத்துறை பஞ்சாயத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை முழுமையாக வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பவானி வட்டார வளர்ச்சி அலுவலர், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தாலுகா தலைவர் சின்னுசாமி, கிளை செயலாளர் சின்னுசாமி ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.