தருமபுரி, ஜன.23- ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர் கள் செவ்வாயன்று வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் 20 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கேரள மாநிலம் போல், தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கியை உரு வாக்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த மாநில ஆள் எடுப்பு மையம், மாவட்ட ஆள்எடுப்பு மையம் ஊழி யர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும். ஊழியர் கடன்களுக்கு ஏற்கனவே இருந்த வந்த வட்டி விகிதம் உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும். உதவி மேலாளர் பதவி உயர்வில் மூன் றுக்கு ஒன்று என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வணிக வங்கியில் உள்ளது போல், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜன.23, 24 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார் பில் அறைகூவல் விடுக்கப்பட்டது. அதன்படி, செவ்வாயன்று தருமபுரி மத் திய கூட்டுறவு வங்கி முன்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 வங்கி கிளைகளிலும் இப்போராட்டம் நடை பெற்றது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி என இரண்டு நாட்களுக்கு ரூ.50 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை நடைபெறாது என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு தரும புரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கஜேந்தி ரன் தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் எஸ்.அறிவழகன், மாநில மகளிர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்.கரோலின்ராஜ், மாவட்ட பொதுச்செய லாளர் ஜி.சாமிகண்ணு, பொருளாளர் எம்.வடிவேல், நிர்வாகி ஜி.கெளசல்யா உட்பட திர ளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.