districts

img

பாதிப்பு ஏற்படுத்தி வரும் கல்குவாரியை மூடிடுக

மேட்டுப்பாளையம், ஜன.29- பொதுமக்கள் மற்றும் விவசாயிக ளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் கல் குவாரியை ஒரேயடியாக மூட வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பலர் கல்குவாரியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அருகே உள்ள இரும்பறை, மாஸ்திபாளையம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றிலும் மாஸ்திபாளை யம், இரும்பறை, பட்டக்காரம்பா ளையம், இட்டிடேபாளையம், பாசக் குட்டை, மொக்கையூர், தாசக்காளி யூர், சண்முகாபுரம், ஓதிமலை ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே  இந்த கல்குவாரியில் பாறை வெடிப்ப தனால் ஏற்படும் தூசி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங் களுக்குள் பரவி வருகிறது. இந்த காற்று மாசுபாட்டால் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வரு கின்றனர். மேலும், இப்பகுதியை சுற் றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் மேயக்கூடிய இடங்க ளிலும் தூசி படிந்து இருக்கிறது. இதனை கால்நடைகள் சாப்பிடுவ தால் வயிற்று கோளாறு ஏற்பட்டு கால் நடைகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. மேலும், வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்கள் மீது தூசுபடிவ தால் அவை போதிய அளவில் வளர்ச்சி அடையாமல் மகசூல் பாதிக் கப்படுகிறது.

எனவே, மாசுகட்டுப் பாட்டு அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு  செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என கிராமமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே தூசி பர வுவதை தடுக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கல்குவாரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இந்த கல்குவாரியால் விவசாயம் முற் றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓதி மலை முருகன் கோவிலுக்கு செல் லும் வழித்தடம் மறிக்கப்பட்டு இந்த கல்குவாரி செயல்படுகிறது. இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக கூறியும் தற்போது வரை உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை. மேலும், கல்குவாரியி்ல் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்துவதால் நிலத் தடி போர்வெல் பாதிக்கப்பட்டு தண் ணீர் எடுக்க முடியாத நிலை உள் ளது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அப்போது பயி ரிட்டால் கல்குவாரியின் உரிமையா ளர் எங்களை மிரட்டுகிறார். இதனை அரசின் கவனத்திற்கு தெரிவிப்பதற் காகவே நாங்கள் எங்களின் போராட் டத்தை முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம், என்றனர்.