districts

img

உள்ளாட்சி சார்பில் தூய்மை பணிகள்

உதகை, டிச.10- உள்ளாட்சி அமைப்பு சார்பில் மக்களுக்கான தூய்மை  இயக்கம் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்கா வது சனிக்கிழமைகளில் நகர் பகுதிகளில் தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதன்படி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகள வில் கூடும் பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளா கங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட், வணிக வளா கங்கள், பொதுக் கழிப்பிடம் ஆகியவற்றில் மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் களுடன்  இணைந்து தீவிரத் தூய்மைப் பணியினை மேற் கொண்டு வருகிறார்கள். இதன்ஒருபகுதியாக, சனியன்று நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஆணை யாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதில்  தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சுவரொட்டி கிழித்து அகற்றினர். இப்பணிகள் உதகை மார்க்கெட், பிங்கர் போஸ்ட், கோடப்பமந்து, அப்பர்  பஜார், லோயர் பஜார் உள்பட பல பகுதிகளில் நடை பெற்றது. முன்னதாக, தூய்மை பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும் சுவர்களில் சுவ ரொட்டி ஒட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.