கோவை,பிப். 26- அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களுக்கு தர மற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை அரசு மருத்துவமனை யில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இங்கு அவர்களுக்கு வழங்கப் படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங்ப வுடர் போன்ற பொருட்களால் அடிக் கடி தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆசிட் ஊற்றி மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பொழுது இருளாயி என்ற தூய்மைப் பணியாளருக்கு உடல்நிலை பாதிக் கப்பட்டது. இதனை யடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடுதிரும்பினார். எனினும் தொடர்ச்சி யாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனை யில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்களுக்கு தரமான பொருட் கள் வழங்கப்பட வேண்டும் எனவும், கையுறை உள்ளிட்டவை வழங்கப் பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர்கள், போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை மருத்துவ மனை நிர்வாகமும், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என வும் தெரிவித்தனர்.