districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி வகுப்பு புறக்கணிப்பு

இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்

நாமக்கல், செப்.9- கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணிப்பு போராட் டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.  நாமக்கல், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி யில், இந்திய மாணவர் சங்கத்தின் கிளை கூட்டம் நடை பெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராஜசூரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர்  மு.தங்கராஜ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது  நிசார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.  இதில், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் கேண்டீன் அமைத்துக் கொடுக்க வேண்டும். அனைத்துத் துறைகளில் உள்ள வகுப்பறைகளுக்கு மின்விசிறி, மின் விளக்கு, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  முறையாக செய்து கொடுக்க வேண்டும். மாணவிகள் விடுதி யில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் அமைக்க வேண்டும்.  விடுதிகளில் மாணவிகளுக்கு முறையான உணவு வழங்குதல்  மற்றும் தூய்மைப் பணியினை முறையாக மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 9 தேதி முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை, கல்லூரி முதல்வர் பானுமதியிடம் மாணவர் சங்க  நிர்வாகிகள் வழங்கினர். 

மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்குத் தீர்வு

திருப்பூர், செப். 9 - திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மூலமாக பல்வேறு வழக்குகளுக்கு சூமூக  தீர்வு காணப்பட்டு உள்ளது  திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்டப்  பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட  சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக மக்கள் நீதிமன் றம் (லோக் அதாலத்) நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட  நீதிமன்ற வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்ட  சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை  மாவட்ட நீதிபதியுமாமான சொர்ணம் நடராஜன் தலைமையில்  நடைபெற்றது  இதில் நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன  விபத்து இழப்பீடு, வங்கி கடன், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்கு,. சிவில் வழக்கு, உள்ளிட்ட வழக்குக ளுக்கு சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட் டவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் மூலமாக பல்வேறு வழக்குகளுக்கு சூமூகத் தீர்வு காணப்பட்டது.

10ஆம் வகுப்பு மாணவன் சரண்

திருப்பூர், செப். 9 - அவிநாசி அருகே இளைஞர் ஒருவர் கழுத்து அறுத்துக்  கொலை செய்யப்பட்ட பிரச்சனையில் 10ஆம் வகுப்பு மாண வர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது  32). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த வேலா யுதம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக குடி யிருந்து குடிநீர் கேன் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வியாழனன்று யுவராஜ் அவரது வீட்டில்  கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பாக அதே  பகுதியில் வசிக்கும் தென்காசியை சேர்ந்த 10ஆம் வகுப்பு  படிக்கும் 16 வயது மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந் தான். போலீசார் அந்த மாணவனிடம் கொலை செய்ததற் கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் யுவரா ஜுக்கும், மாணவனின் தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. அப்போது யுவராஜ், மாணவனின் பெற்றோரை அவ தூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யுவ ராஜ் மீது ஆத்திரம் கொண்டு, அந்த மாணவன் வியாழனன்று  யுவராஜ் வீட்டுக்கு சென்று அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவிநாசி போலீசார் அந்த மாணவனை.கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து சென் றனர்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:34.64/60அடி நீர்வரத்து:821கனஅடி
வெளியேற்றம்:23கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்: 60.24/90அடி.நீர்வரத்து:580கனஅடி
வெளியேற்றம்:256கனஅடி

பொதுக்குடிநீர் குழாய்களை ஒழிக்கவா ஜல் ஜீவன் அம்ருத் திட்டம்?

திருப்பூர், செப். 9 - வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் பொது குடிநீர் குழாய்களை அகற்றி, குடிநீர்  இணைப்பு பெற பொதுமக்களை கட்டாயப் படுத்தும் ஜல் ஜீவன் - அம்ருத் 2.0 திட்ட செயல் பாடுகளை போர்க்கால அடிப்படையில் நிறுத் தக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவில் தாராபுரம் சாலை (கிழக்கு) பகுதியில் வசிக்கும் ச.மணிகண் டன் வெள்ளகோவில் நகராட்சி ஆணையாள ரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:  வெள்ளகோவில் 10 வது வார்டுக்கு உட் பட்ட நான் வசிக்கும் பகுதி மற்றும்  இந்த நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு  பகுதிகளில் பொது குடிநீர் குழாய்களை அப்பு றப்படுத்தும் வகையில்  ஜல் ஜீவன் - “அம்ருத்  2.0 என்னும் பெயரில் ஒன்றிய அரசின்  திட்டத்தை நடைமுறைப்படுத்த குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நகராட்சியால் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பொது  குடிநீர் குழாய்கள் அகற்றப்படும் என்ற நிலை  வெகுமக்களை பாதிக்கும் செயலாகும்.  குடிநீர் வரத்து தற்போது கணிசமாக உள்ள நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள குடிநீர் குழாய்கள் யாதொரு சேதமும்  ஏற்படாத நிலையில், பழைய இணைப்பு களை துண்டித்து விட்டு புதிய குழாய்கள்  அமைத்து  ஏற்கனவே இணைப்பு உள்ளவர்க ளுக்கு இலவச இணைப்பு தருவதுடன்,  புதிய இணைப்பு வேண்டுவோர் ரூ.8 ஆயிரம்  செலுத்த வேண்டும். அதை மூன்று தவணைக ளில் செலுத்தலாம் என்பது, வெகு மக்களுக்கு  எந்த வகையில் பயனுள்ளது என்ற கேள் வியை எழுப்புகிறது. மேலும், பொது குடிநீர் குழாய்கள் அகற் றப்படுவதன் மூலம், ஒவ்வொரு வீட்டாரும்  குடிநீர் இணைப்பு பெற்றே ஆகவேண்டும்  என்ற கட்டாய நிர்பந்தத்தை இந்த திட்டம்  வெகு மக்களுக்கு ஏற்படுத்துகிறது.  இதன் மூலம் வருவாய் குன்றியுள்ள  சாமான்ய மக்கள் வெகுவாக  பாதிக்கப்படுவ தோடு, பணம் செலுத்த வேண்டிய மறைமுக மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆகவே, ஜல் ஜீவன் - அம்ருத் 2.0 திட்ட  செயல்பாடுகளை அறவே நிறுத்திட போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற் கொள்ளுமாறு  ச.மணிகண்டன் வலியுறுத்தி இருக்கிறார்.

நகை கொள்ளை

சேலம், செப்.9- சேலம் மாவட்டம், மேட் டூரை அடுத்த கொளத்தூர், ஏழுபரணை காட்டைச் சேர்ந்தவர் ராமசாமி (70).  இவரது மனைவி அத்தா யம்மாள் (65). இவர்களுக்கு  மல்லிகா (45) என்ற மகளும்,  பிரகாஷ் (40) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், வியாழனன்று இரவு விவ சாய நிலத்தில் உள்ள வீட்டில்  அத்தாயம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உள்ள கொட்டகையில் ராம சாமி தூங்கிக் கொண்டி ருந்தார். இதையடுத்து வெள்ளியன்று அதிகாலை அத்தாயம்மாள் கட்டிலில் படுத்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள் ளத்தில் இறந்து கிடந்தார். மேலும், அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ஓமலூர்  காவல் துணை கண்காணிப் பாளர் சங்கீதா உள்ளிட்ட  போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர்.

ஆயுதங்களுடன் சென்றவர்களை பிடிக்க முயன்ற போது விபத்து

காவல்துறை ஆய்வாளர் காயம்

கோவை, செப்.9- கோவை அருகே ஆயுதங்களுடன் இருசக்கர வாக னத்தில் சென்றவர்களை பிடிப்பதற்கு  துரத்திச் சென்ற  காவல் துறை வாகனம் தடுப்பில் மோதி விபத்துக்குள் ளானது. இதில், காவல்துறை ஆய்வாளர் படுகாயமடைந் தார்.  கோவை மாவட்டம், சூலூர் அடுத்த தென்னம்பாளையம் பிரிவு அருகே அவிநாசி சாலையில் நள்ளிரவில் சூலூர்  காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற  போது,  நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால்  சந்தேகமடைந்த போலீசார் தங்களது வாகனத்தில், இரு சக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர். போலீசார் துரத்து வதை பார்த்து அச்சமடைந்த இருசக்கரத்தில் சென்ற நபர்கள்,  இருசக்கர வாகனம் மற்றும் கையில் இருந்த உடமைகளை  அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்நிலையில்,  அதிவேகமாக வந்த காவல்துறை வாகனம் சாலையில் கிடந்த  இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர்  வலது பக்கமாக திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து  சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் மாதையனுக்கு முழங்கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து சக காவலர்கள் காவல் ஆய்வாளரை அருகி லுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி  வைத்தனர். மருத்துவமனையில் ஆய்வாளரை பரிசோதித்த மருத்துவர்கள் கை மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளனர்.  இதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் விட்டுச்  சென்ற பைக் மற்றும் உடமைகளை கைப்பற்றி போலீசார்  சோதனையிட்டபோது, அதில் பட்டா கத்திகள், இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வழிப்பறி அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட முயற்சித்திருக்க கூடும் என சந்தேகித்துள்ள போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் 2 தனிப் படைகள் அமைத்து  தப்பிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.