நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வியாழனன்று தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. ஒருங்கிணைப்பாளர் அங்கயர்கன்னி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆஷா பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் சீதாலட்சுமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம், பொருளாளர் ஏ.நவீன்சந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.