கோவை, டிச.13- ஒப்பந்த பணியாளர்களின் ஊதிய பிரச்சனை முடியும் வரை இடைக் கால நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக கஞ்சி காய்ச்சும் போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி, மூன்று பேரூராட்சிகள் மற்றும் 299 வழியோர கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட் டத்தில் பணியாற்றக்கூடிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. குடிநீர் வடி கால் வாரியத்தில் ஊழியர்களின் பேரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுகுறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல கட்ட போராட்டங்களை சிஐடியு குடிநீர் வாடிகாவல் வாரிய தொழிற் சங்கம் நடத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபின், கோவை வடக்கு கோட்டாட்சியர் முன்னிலையில் ஐந்து முறை பேச்சு வார்த்தை நடத்தியும், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத சூழல் உள்ளது. ஆகவே, ஊழியர்களின் ஊதியப் பிரச்சனை முடியும் வரை இடைக்கால நிவாரணமாக ஊதியம் வழங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படுவதை கண்டித்தும், இந்த கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் உதவி தலைவர் எம்.பால குமார் தலைமை தாங்கினார். கோரிக் கைகள் குறித்து பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் உரையாற்றினார். பிரான்சிஸ், சசிக்குமார், பெலிக்ஸ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். திங்களன்று துவங்கிய கஞ்சி காய்ச்சும் போராட்டம் செவ்வாயன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எட்டும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியுவினர் தெரிவித்தனர்.