தாராபுரம், ஜூன் 28 - தாராபுரம் நகராட்சியில் தள்ளு வண்டி, சைக்கிள் சிறு வியாபாரி கள் சுங்கம் செலுத்த வேண்டும் என ரூ.14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட் டதை ரத்து செய்ய வேண்டும் என தாராபுரம் பொதுத் தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. தாராபுரம் தாலூகா பொது தொழிலாளர் சங்கத்தின் 21 வது மாநாடு தளவாய்பட்டிணம் சாலை யில் உள்ள சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. சங்கக் கொடியை காளியப்பன் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு சங்கத் தின் தாராபுரம் தாலூக்கா தலை வர் என்.கனகராஜ் தலைமை வகித் தார். துணை செயலாளர் கே.மேக வர்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். செயலாளர் அறிக்கையை பி. பொன்னுசாமி முன்வைத்தார். பொருளாளர் அறிக்கையை கே. கோவிந்தராஜ் முன்வைத்தனர். தொடர்ந்து அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடை பெற்றது. தலைவராக என்.கனக ராஜ், துணை செயலாளராக கே. மேகவர்ணன், செயலாளராக பி. பொன்னுச்சாமி, பொருளாளராக கே.கோவிந்தராஜ் தேர்வு செய்யப் பட்டனர். வி.பழனிச்சாமி, ராதா, டி. மோகன், என்.சுப்பிரமணி, எம்.சுப் பிரமணி, லோகு, கீதாஞ்சலி ஆகி யோர் கொண்ட குழு தேர்வு செய் யப்பட்டது.
சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.மூர்த்தி புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித் தும் பேசினார். இக்கூட்டத்தில் நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை முறை யாக மாதந்தோறும் வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கி தொழிலாளர்களுக்கு சம் பள ஒப்பந்தமும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு டிஏ உள்ளிட்ட பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும். அக்னி பாத் என சொல்லி ராணுவத்தில் தனியார்மயத்தையும், மதவாத திணிப்பை கடைப்பிடிக்கும் ஒன்றிய அரசு உடனடியாக அக்னி பாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தாராபுரம் நகராட்சி பகுதியில் தள்ளுவண்டி, சைக் கிள் மூலம் தினசரி கடைகள் வைத்து நடத்தி வரும் ஏழை எளிய சிறு வியாபாரிகள் நகராட்சிக்கு சுங்கம் செலுத்த வேண்டும் எனக்கூறி எந்தவிதமான வெளிப்படைதன்மையும் இல்லா மல் ரு.14 லட்சத்திற்கு ஏலம் விடப் பட்டுள்ளது. தாராபுரம் நகராட்சி யின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய மக்களை சுரண்டும் வகை யில் உள்ளது. எனவே இந்த ஏலத்தை ரத்து செய்து பழைய முறைப்படி எவ்வித கட்டணம் வசூலிக்கக்கூடாது. நியாய விலை கடைகளில் 1000 ரேசன் அட் டைக்கு கூடுதலாக இருந்தால் பிரித்து வேறு கடைகள் உரு வாக்கி மக்களின் சேவையை எளி மைப்படுத்தவேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.