சேலம், பிப்.13- போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேலம் கோட்ட தலைமை அலுவல கம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு ரூ.3 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் டிஏ உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து, பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தினர், போக்குவரத்து கழக சேலம் கோட்ட தலைமை அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் செம் பன் தலைமை வகித்தார். இதில் சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொதுச்செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு போக்குவரத்து சேலம் கிளைச் செய லாளர் சந்திரன், ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகி பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.