நாமக்கல், நவ.7- இறக்குக்கூலி உயர்வு கேட்டு, நவ.29 ஆம் தேதி முதல் காலவரை யற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சிஐ டியு டாஸ்மாக் சுமைப்பணி சம்மேள னம் அறிவித்துள்ளது. சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில நிர் வாகிகள் மற்றும் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சம் மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து வரும் மதுபான பெட்டிகளை குடோனில் இறக்கி வைக்கும் வேலைக்கான இறக்குக் கூலி உயர்வினை 2 ஆண்டுகொரு முறை சுமைப்பணி தொழிலாளர் கள் பெற்று வருகின்றனர். தற்போது கூலி உயர்த்தப்பட்டு மூன்று வரு டங்கள் முடிந்தும், இறக்குக்கூலி உயர்த்தி வழங்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி தொழிற்சங் கங்கள் மூலம் கடந்த ஒரு வருட மாக பலகட்ட போராட்டங்களை யும், டாஸ்மாக் நிர்வாக இயக்கு நரை பலமுறை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மது விலக்கு துறை அமைச்சர் சு.முத்துச் சாமியை, நேரில் சந்தித்து இறக் குக்கூலி உயர்வு குறித்து உரிய நட வடிக்கை எடுக்க தொழிற்சங்கத் தின் மூலம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து நிர்வாக இயக்கு நரிடம், மதுபான உற்பத்தியாளரி டம் உடனடியாக பேசி கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அமைச்சர் அறிவுறுத்தி னார். இதன்பின் தொழிற்சங்க தலை வர் நவ.1 ஆம் தேதியன்று டாஸ் மாக் நிர்வாக இயக்குநரை நேரில் சந்தித்து பேசியபோது, உடனடி யாக கூலி உயர்வு கிடைப்பதற் கான ஏற்பாடு இருப்பதாக தெரிய வில்லை. அமைச்சர் அறிவுறுத்திய பின்னும், டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏற்புடை யதல்ல. எனவே, உடனடியாக அமைச்சர் நேரடியாக தலையிட்டு இறக்குக்கூலி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். இதனை வலியு றுத்தி அனைத்து டாஸ்மாக் குடோன் முன்பும் நவ.8 ஆம் தேதியன்று (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பிரச்சனை தீர்க்கப்படா விடில் நவ.29 ஆம் தேதியன்று முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சம் மேளன சிறப்புத்தலைவர் எஸ். குணசேகரன், மாநில பொதுச்செய லாளர் இரா.அருள்குமார், மாநில துணைத்தலைவர்கள் அ.பிச்சை முத்து, அ.சுடலைகாசி, கே.கஜேந் திரன், மாநில துணைச்செயலாளர் கள் அ.கோவிந்தன், ஆர்.பாண்டி, எம்.எஸ்.பீர்முகமது, ஆர்.சிவக் குமார், மண்டல பொறுப்பாளர்கள் முகமதுல்லா, வெற்றி, ராமச்சந்தி ரன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.