கோவை, ஜூலை 9- பயிற்சியற்ற தொழிலாளர்களை கொண்டு எரிவாயு சிலிண்டரை நிரப் பிய பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனத் தினரை கைது செய்ய வேண்டும். சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியுவினர் சனி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவையில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு மணியகாரன்பாளை யத்தில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து நான்கு பேர் உயி ரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தின் அலட் சியமும், தொழிலாளர் விரோத போக் குமே காரணம் என குற்றம்சாட்டி சிஐ டியுவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு நிர்வாகிகள் கூறுகை யில், கடந்த 28”ம் தேதி பாரத் கேஸ் உபயோகித்து வருகின்ற மணியகா ரம்பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி, என்பவரது வீட்டில் கேஸ் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமதி, லலிதாம்பிகை, திலிப்குமார், தினேஷ்,என நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்க பட்டார்கள்.
இவர்கள் நான்கு பேரும் உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்திற்கு பிபிசிஎல் நிறுவ னம்தான் முழு காரணம்.காலாவதி யான கேஸ் சிலிண்டரில் கேஸ் நிரப்பி அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட் டது தான் இந்த விபத்துக்கு காரணம். பயிற்சியற்ற தொழிலாளிகளை பயன்படுத்தி கேஸ் சிலிண்டரில் எரி வாயு நிரபப்படுகிறது என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சங்கத் தின் சார்பில் புகார் தெரிவித்திருந் தோம். இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத் திற்கு சென்று நாங்கள் ஆய்வு செய்த போது காலவதியான சிலிண்டரில் கேஸ் நிரப்பியது தெரியவந்தது. ஆகவே, இந்த விபத்திற்கு கார ணம் பிபிசிஎல் நிறுவனமும், அதன் ஒப்பந்ததாரர்களுமே காரணம். உயி ரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் சிலிண் டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய நிறுவனம் மீது கைது உள்ளிட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும். குடும் பத்தில் மீதமுள்ள கர்ப்பிணிப் பெண் ணான சரண்யாவிற்கு பாரத் கேஸ் நிறுவனத்தில் உயர்ந்த பதவிக்கான பணிகளை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற் றும்வரையில் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் உள்ள தினேஷ் மற்றும் திலீப்பின் உடல்களை வாங்கப் போவதில்லை என தெரி வித்தனர். முன்னதாக இந்த போராட் டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார்.
இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி மற்றும் சிஐ டியு கட்டுமான சங்க தலைவர் கே. மனோகரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சிஐடியு, மாணவர் சங்கத்தினர் ஏராள மானோர் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்டனர். முன்னதாக கேஸ் சிலிண்டர் விபத்தில் பலியான குடும்பத்தின ருக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதிக் கான கோரிக்கைகள் குறித்த மனுவை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ப்பீ.லீலாஅலெக்சிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சிஐடியு தலைவர்கள் வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர் உரிய விசாரணை மேற்கொண்டு நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.