நாமக்கல், ஜூலை 29- அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடி யாக துவங்க வேண்டும். இல்லையேல் வேலை நிறுத்த போராட்டத்தை தடுக்க முடியாது எனக்கூறி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் பணிமனைகளில் பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த தயாரிப்பு விளக்கம் கூட்டத் திற்கு நாமக்கல் கிளை தலைவர் பி.வரத ராஜன் தலைமை தாங்கினார். இதில், 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடி யாக பேசி இறுதிப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பணப் பயன்கள் மற்றும் அகவிலைப்படி, மருத்துவ காப் பீடு திட்டம் உள்ளிட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். போக் குவரத்து கழகங்களை தனியார் மையப் படுத்துவதை கைவிட வேண்டும். போக் குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை தமிழக சட்டசபை பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்று உரையாற்றினர். முடி வில், ஆர்.மோகன்குமார் நன்றி கூறி னார்.
சேலம்
சேலம் மெய்யனூர், அஸ்தம்பட்டி, அரசு விரைவு போக்குவரத்து கழகம், ஓமலூர், தாரமங்கலம், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம், பள்ளப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட பணிமனைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்கத்தின் சேலம் மண் டல பொதுச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மண்டல தலைவர் செம்பான், மண்டல பொருளாளர் சேகர், துணை பொது செயலாளர் செந்தில்குமார், சிஐ டியு அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் என்.முருகே சன் உள்ளிட்ட போக்குவரத்து சங்க நிர் வாகிகள், சம்மேளன குழு உறுப்பினர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.