சேலம், ஜூலை 5- முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியு றுத்தி கட்டுமான நலவாரிய அலுவல கம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். முறைசாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆன் லைன் நலவாரிய பதிவில் ஏற்படும் குள றுபடிகளை முறைப்படுத்த வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெண் களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள நிதியை சம்பந் தப்பட்ட வாரிய உறுப்பினர்களுக்கு மட் டும் பயன்படுத்த வேண்டும். மாதந்தோ றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்தி தொழிலாளர்களின் குறைபாடுகளை களைய வேண்டும். பணியிடங்களில் மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்க ளின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்ச மும், ஈமச்சடங்கிற்கு ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும்.
கட்டுமான பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர் களை பாதுகாத்திடும் வகையில், நாட் டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ரூ.3 லட் சம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாநிலக்குழு அறை கூவல் விடுத்திருந்தது. இதன் ஒருபகுதி யாக மேற்கு மாவட்டங்களில் பரவலாக சிஐடியுவினர் பெருந்திரள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கோரிமேடு கட்டு மான நல வாரிய அலுவலகம் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பொ.பன்னீர் செல் வம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், சிஐடியு சுமைப்பணி சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடபதி, சாலைப் போக்குவரத்து மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் சி.கருப் பண்ணன், ஜவுளி சங்க மாவட்ட செயலா ளர் பி.ராமமூர்த்தி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.கோவிந்தன், ஆர்.வைரமணி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு சிஐடியு மாவட்ட தலைவர் பி.ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயலா ளர் சி.நாகராசன், மாவட்ட பொருளாளர் ஏ.தெய்வானை, மாநிலக்குழு உறுப்பி னர்கள் சி.கலாவதி, ஜி.நகராஜன், மாவட்ட நிர்வாகிகள் சி.முரளி, சி.ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், பொருளாளர் கே.மாரப்பன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மாதவன், பவானி பொதுத்தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ஜெகநாதன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஷேக்தா வூத், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க தலைவர் தனபால், பொது தொழிலாளர் சங்க நிர்வாகி சுந்தரரா ஜன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகி ஜெகநா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் பொன்.பாரதி நன்றி கூறி னார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் உள்ள நலவாரிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எம். அசோகன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் கு.சிவராஜ், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் சு.சுரேஷ், மாவட்ட பொருளா ளர் காளியப்பன், தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ராயப்பன், சுமைப்பணி தொழிலாளர் சங்க நிர் வாகி பி.சரவணன், ஆட்டோ தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் பி.பொன்னு சாமி, துணைச்செயலாளர் சி.ஜேபி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர். இதைத்தொடர்ந்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருநந்தனிடம் (பொ) கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தலைவர்கள் அளித்தனர்.
கோவை
கோவை, இராமநாதபுரம் ஒலம்பஸ் நலவாரிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தையல் சங்க செயலாளர் ஆர்.வேலுசாமி தலைமை தாங்கினார். இதில், சிஐடியு மாநில செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், கட்டுமான சங்க பொதுச்செயலாளர் கே.மனோ கரன், தங்க நகை தொழிலாளர் சங்க செயலாளர் சந்திரன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை சங்க செயலாளர் கே.ரத்தினகுமார், ஆட்டோ சங்க செய லாளர் எம்.கே.முத்துக்குமார், சுமைப் பணி சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராஜன், தனியார் பாதுகாவலர் சங்க பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபிக், கைத்தறி சங்க பொதுச்செயலாளர் ராஜ கோபால், சிமெண்ட் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.பஞ்சலிங்கம், வடக்கு பொதுச்செய லாளர் ஆர். கேசவமணி, மாநகர பொதுச் செயலாளர் டி.வி.ரமணி, வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ராமு உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.