districts

img

மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர் மீது தாக்குதல்

கோவை, ஜன.7- மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர் மீது நடத்தப்பட்ட சாதி வெறி தாக்குதலை கண்டித்து சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சேகுப்பட்டியில் மக் களை தேடி மருத்துவ திட்ட ஊழி யராக பணிபுரிந்து வரும் தனலட்சு மியை, சாதி ரீதியாக பேசி ஒரு கும் பல் கடுமையாக தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட அவரது கண வர் செந்தில் மீது, அக்கும்பல் தாக்கு தலை நடத்தியுள்ளது. இச்சம்ப வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாதி வெறி பிடித்த குற்றவாளிகள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டம் தெரிவித் துள்ளது.  இதன் ஒரு பகுதியாக, சிஐடியு கோவை மாவட்டக்குழு சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.மனோ கரன் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர். இதில், மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் அங்காள ஈஸ்வரி, சிஐடியு மாநி லக் குழு உறுப்பினர்கள் ஜான் அந்தோனிராஜ், கே.ரத்தின குமார், ராஜன், எம்.கே.முத்துக்குமார், உள் ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.