திருப்பூர், அக். 6 - நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தீபா வளி போனஸ் ரூ.5ஆயிரம் வழங்க வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பாக வியாழக்கி ழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்க ளுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண் டும். முந்தைய அரசு வழங்கியது போல பொங் கல் தொகுப்பு கட்டுமான தொழிலாளர் அனை வருக்கும் வழங்க வேண்டும். பெண் கட்டு மான தொழிலாளிக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண் டும். திருப்பூர் வாரிய அலுவலகத்தில் தேங்கி கிடக்கும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 35 மற்றும் 36 ஆவது வாரியக் கூட்டப் பரிந்துரைகளை உடனடியாக அமலாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் எம்.கணேசன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜன், மாவட்டத் துணைத் தலைவர் கே.உன்னி கிருஷ்ணன், கட்டுமானத் தொழிலாளர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஏ.ராஜன், மாவட்ட பொருளாளர் பி.ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற் றினர். இதில் பெண் தொழிலாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.