திருப்பூர், பிப். 6 – மோட்டார் போக்குவரத்து ஓட்டு நர்களைக் கிரிமினல் குற்றவாளி களாக சித்தரிக்கும் புதிய வாகன சட்டத் திருத்தத்தை நடப்பு நாடாளு மன்றக் கூட்டத் தொடரிலேயே ஒன் றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு மோட்டார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக செவ்வாயன்று சிஐ டியு மோட்டார், ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய அரசு புதிய வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். எதிர்பாரா சாலை விபத்தில் தொடர்புடைய ஓட் டுனர்களை கிரிமினல் என்று வழக்கு பதிவு செய்யக்கூடாது, விபத்தில் தொடர்புடைய ஓட்டுநருக்கு 10 வருட சிறை ரூ.7 லட்சம் அபராதம் என்பதை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், மாநில அரசு ஆன் லைன் அபராதம், வாகன வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசுப்போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலப் பொதுச் செயலாளர் செல்லதுரை, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உண் ணிகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்தில் உள்ள பாதகமான விசயங்களைச் சுட்டிக்காட்டிப் பேசினர். மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.விஸ்வநாதன், மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் சிவராமன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட் டார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் நிறைவில் பிரதமர் மோடிக்கு அனுப்பும் கடிதத்தை மாவட்ட ஆட்சி யர் வழியாக ஒப்படைப்பதற்காக ஆட்சியரின் நேர்முக உதவியாளரி டம் வழங்கினர்.