சேலம், ஏப். 28- நரசுஸ் ஸ்பின்னிங் மில் ஆலையை சட்டவிரோதமாக மூடி தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்க மறுத்த மில் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சார் பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா அடுத்துள்ள ஆர்சி செட்டிப்பட்டி பகுதி யில் செயல்பட்டு வரும் நரசுஸ் ஸ்பின்னிங் மில் ஆலை நிர்வாகம், சட்ட விரோதமாக ஆலையை மூடி தொழிலா ளர்களுக்கு வேலை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதை கண்டித்து சிஐடியு பஞ்சாலை தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஸ்பின்னிங் மில்ஸ் கிளைச் செயலா ளர் ஆறுமுகம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட் டத் தலைவர் டி. உதயகுமார், மாவட்ட செயற்குழு பி.ராமமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகா செயலாளர் என். ஈஸ்வரன், பால் சங்க மாவட்டத் தலைவர் பி.அரியா கவுண் டர் மற்றும் ஓமலூர் இடைக்கமிட்டிச் செயலாளர்கள் கே.சேகர், சின்ராஜ், ரவிக்குமார் மற்றும் நிறுவனத்தில் பணி புரியும் ஏராளமான ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கு மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.