districts

img

இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு துணைப்போவதா?

மோடி அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் சேலம், நவ.7- இனவெறி பிடித்த இஸ்ரேல் நாட் டுக்கு துணைப்போகும், மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கொடூர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மருத் துவமனை உள்ளிட்ட பொது இடங்க ளில் தாக்குதல் நடத்தியதன் காரணமாக பல்வேறு குழந்தைகளும் பொதுமக்க ளும் மாய்ந்து வருகின்றனர். இந்நிலை யில், ஐநா சபையின் கருத்தின்படி இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டை அமல் படுத்த வேண்டும். இனவெறி பிடித்து, பாலஸ்தீன மக்களை கொன்று குவிக் கும் இஸ்ரேல் நாட்டின் வன்முறை வெறி யாட்டத்திற்கு துணைப்போகும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் நடவ டிக்கையை கண்டித்து சிஐடியு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் ரயில்வே கூட்செட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐ டியு சுமைப்பணி தொழிலாளர் சம்மே ளன தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், சிஐடியு  சாலை போக்குவரத்து சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.