திருப்பூர், செப். 11 - திருப்பூரில் சம்பள பாக்கி கேட்ட தொழி லாளி மீது கொலைவெறித் தாக்குதல் நடத் திய பனியன் ஆலை முதலாளி மற்றும் மேலா ளரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழி லாளியுடன் சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட ஆட் சியரிடம் புகார் மனு அளித்தனர். இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு, ஸ்ரீநகர் பகுதியில் எவர்கிரீன் என்ற பனியன் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். அவருக்கு ஆலை நிர்வாகம் தர வேண்டிய சம்பள பாக்கித் தொகையை கேட்பதற்காக கடந்த 7ஆம் தேதி அங்கு சென்றிருக்கிறார். நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த நிலையில், சம்பள பாக்கி தந்தால்தான் அங்கிருந்து செல்வேன் என்று தொழிலாளி உறுதியுடன் கூறியிருக்கிறார். ஆனால் அந்த கம்பெனி முதலாளி சம்பள பாக்கியைத் தர மறுத்ததுடன், நிர்வாகத்தைச் சேர்ந்த நிஜாம் என்பவரை சேர்த்துக் கொண்டு, திலீப் குமாரை கடுமையாகத் தாக் கியுள்ளனர். அத்துடன் ஆடைகளை வெட்டு வதற்கு பயன்படுத்தப்படும் கத்திரியை கையில் எடுத்து குத்திக் கொலை செய்து விடு வேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள் ளார். இதையடுத்து திலீப் குமார் தமிழ் தெரிந்த ஒருவர் உதவியுடன் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார். செப்டம்பர் 8ஆம் தேதி யன்று அனுப்பர்பாளையம் காவலர்களுடன் ஆலை முதலாளி ்அரசு மருத்துவமனைக்குச் சென்று திலீப்குமாரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் சென்ற னர். அரசு மருத்துவமனை நிர்வாகம் முறைப் படி டிஸ்சார்ஜ் செய்யாத நிலையில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட திலீப் குமார் புகார் மனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சிஐடியுவைத் தொடர்பு கொண்ட திலீப் குமார், சங்கத்தின் மூலம் தனது சம்பளத்தைப் பெற்றுத் தரவும், தாக்குதல் நடத்திய முதலாளி மற்றும் நிர்வா கத்தைச் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வும் முயற்சி மேற்கொண்டார்.
அதன்படி திங்களன்று சிஐடியு பனியன் தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், திலீப் குமாரை அழைத்துக் கொண்டு திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியால் ஏற் பட்ட பதற்றம் முற்றிலும் தணியாத நிலையில், இது போன்ற சம்பவங்களில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திருப்பூர் நகரின் அமைதியை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பீகார் மாநில தொழிலாளியான திலீப் குமாரை தாக்கிய கம் பெனி முதலாளி மற்றும் ஊழியர் நிஜாம் ஆகி யோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியு சார்பில் வலியு றுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாநகர காவல் ஆணையரி டமும் புகார் அளிக்கச் சென்ற நிலையில், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் சிஐ டியு நிர்வாகி சம்பத்தைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட கம்பெனி முதலாளி மற்றும் நிர்வாக பணியாளர் மீது உரிய சட்டப் பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்ததாகவும் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறினார்.