திருப்பூர், பிப்.28 – ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் அநியாயமாக பணம் பறிக்கும் நிலையைக் கண்டித்தும், பொதுப் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் 15 நிமிடம் வாகன நிறுத்தப் போராட்டம் நடத்தப்ப டது. ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் வழிப்பறி கொள்ளை போல் பணம் பறிப்பதை கைவிடவும், மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தைக் கைவிடவும், பழைய வாகனங்க ளுக்கு தடை விதிப்பதை விலக்கி, பொதுப் போக்குவரத்தை பலப்படுத்தவும், தனியார் வாடகை வாகன செயலியைப் போல் அரசே செயலியை உருவாக்கி பொது வாகனப் போக்குவரத்தை நடத்தவும் வலியுறுத்தி சிஐ டியு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட் டது.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அரு கில் நடைபெற்ற வாகன நிறுத்தப் போராட் டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்து தொழிற்சங்க மண்டலச் செய லாளர் செல்லதுரை, பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியம், சிஐ டியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராமன், உள்ளிட்டோர் வாகனங்களை நிறுத்தி, அர சின் கொள்கைகளை அம்பலப்படுத்தி முழக் கம் எழுப்பினர். திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலை மையில் சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு, ஆட்டோ சங்க நிர்வாகி ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர். வாகனங்களை நிறுத்தி, கோரிக்கை முழக்கம் எழுப்பினர். புதிய பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற போராட்டத்துக்கு சிஐடியு கட்டு மானத் தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் டி.குமார் தலைமை வகித்தார். மோட்டார் சங்கத் தலைவர் எஸ்.விஸ்வநா தன், பொருளாளர் அருண், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் பங் கேற்று வாகன நிறுத்தப் போராட்டம் நடத்தி னர்.
உடுமலைபேட்டை
சிஐடியு சார்பில் உடுமலை மின்வாரிய அலுவலகத்தின் முன்பு செவ்வாயன்று வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மோட்டார் சங்க தலைவர் சுதாசுப்பி ரமணியன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நிமிடம் வாகனம் நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலா ளர் தண்டபாணி, விவசாய சங்க மாவட்ட செய லாளர் பஞ்சலிங்கம், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜகாங்கீர், மஜீத், இப்ராகிம் மற் றும் சிஐடியு போக்குவரத்து சங்கத்தின் கார்த் திகேயன் உள்ளிட்ட திரளானோர் வாகன நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண் டனர்.
வஞ்சிபாளையம்
அவிநாசி - வஞ்சிபாளையத்தில் நடை பெற்ற வாகன நிறுத்தப் போராட்டத்தில் சிஐ டியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகிகள் குட்டி என் கிற மோகனசுந்தரம், கார்த்திக், ஆறுமுகம், காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காரணம்பேட்டை
கோவை - திருச்சி நெடுஞ்சாலை காரணம் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆட்டோ முருகேசன், செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் பெதப்பம்பட்டியிலும் வாகன நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.