சேலம், மே 31- சிஐடியு அமைப்பு தின கொடியேற்ற விழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சேலம் உருக்காலை நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற கொடியேற்றல் நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி. உதயகுமார் பங்கேற்று செங்கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து வி.பி.சிந்தன் நினைவு தின ரத்ததான முகா மில் பங்கேற்று ரத்த தானம் வழங்கியவர்க ளுக்கு கதர் ஆடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், சிஐடியு மாவட்டக் குழு அலுவலகமான வி. பி. சிந்தன் நினைவரங் கத்தில் உள்ள எம். சீரங்கன் நினைவு அரங் கத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர் செல்வம் தலைமையில் சிஐடியு அமைப்பு தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராஜன் பங்கேற்று கருத்துரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு சாலைப் போக்கு வரத்து சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்ட செயலா ளர் டி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.