உடுமலை, ஜூன் 23 - உடுமலைப்பேட்டை நகரத்தில் வாரச் சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள ராஜேந்திரா ரோட்டில் கடந்த 30 ஆண்டு களாக மினி டோர், டூரிஸ்ட் கார், வேன், டெம்போ உள்பட 100க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வாட கைக்கு ஓட்டி பலர் தங்களது வாழ்வாதா ரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இந்த இடத்தில் போக்கு வரத்து நெருக்கடி உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்று நக ராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சிஐடியு தலைமையில் ஒன்று சேர்ந்து உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத் தீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத் தினர். இப்பேச்சுவார்தையில், ஏற்கனவே உள்ள அதே இடத்தில் தொடர்ந்து வாக னங்களை நிறுத்திக் கொள்வது என்றும், சாலையில் போக்குவரத்துக்கு இடை யூறு இல்லாமல் வாகனங்களை சீராக முறைப்படுத்தி நிறுத்திக் கொள்வது என்றும் பேசி முறைப்படுத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் சிஐடியு நிர்வாகிகள் கே.தண்டபாணி, எஸ்.ஆர். மதுசூதனன், அ.பஞ்சலிங்கம், சுதாசுப் பிரமணியம், கே.இயேசுராஜ், தோழன் ராஜா உள்பட வாகன ஓட்டுநர்கள் மற் றும் உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரச்சனை ஏற்பட்டவுடன் உடனடி யாக தலையிட்டு தீர்வு கண்ட சிஐடியு தொழிற்சங்கத்திற்கு வாகன ஓட்டுனர் கள், உரிமையாளர்கள் நன்றி கூறி ஆத ரவு தெரிவித்தனர்.