ஈரோடு, ஆக.13- தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங் களில் சட்ட உரிமைகளை அமலாக்க வேண்டுமென சிஐடியு உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சிஐடியு ஈரோடு மாவட்ட 9ஆவது மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். ரங்கநாயகி வரவேற் றார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத் தலைவர் எஸ்.ராதாமணி, ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகி பி.தீபா, பொது தொழிலாளர் சங்க சத்யா, பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சங்க கைபானி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எச். ஸ்ரீராம் தொடக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.எஸ்.பிரசன்னா ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி நிறைவுரையாற்றினார். 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணியிடங் களில் புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும். புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய ஒருங்கிணைப்பாளராக பி.ஸ்ரீ தேவி, ஒருங்கிணைப்புக்குழுவிற்குத் சூர்ய கலா, பி.தீபா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.