districts

img

நலவாரிய பயன்களை அதிகப்படுத்திடுக சிஐடியு ஹோட்டல் சங்க பேரவை வலியுறுத்தல்

கோவை, ஜூலை 27- கேட்டரிங், சமையலர்களுக்கு நலவாரிய பயன்களை அதிகப்படு்த் திட வேண்டும் என சிஐடியு ஹோட்டல்  சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு கோவை மாவட்ட லாட்ஜ்,  ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலா ளர் சங்கத்தின் 13 ஆவது ஆண்டு பேரவை செவ்வாயன்று கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. மனோகரன் தலைமையில் நடை பெற்ற பேரவையில், துணைத் தலை வர் பி.தங்கராஜ் வரவேற்புரை ஆற்றி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார். ஆண்டு  வேலையறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை சந்தோஷ் முன் வைத்தார்.  இதில், ஹோட்டல், லாட்ஜ், பேக்கரிகளில் தொழிலாளர் துறை ஆய்வு நடத்தி தொழிலாளர்களுக்கு அனைத்து சட்டசலுகைகளையும் அமல்படுத்த வேண்டும். கேட்டரிங் தொழில் செய்யும் சமையல் தொழி லாளர்களுக்கு நலவாரிய பணப் பலன்களை அதிகப்படுத்த வேண் டும். இதற்கான நிதியினை விழா  நடத்துபவர்கள், மண்டப உரிமையா ளர்கள் ஆகியோரிடம் இருந்து  இரண்டு சதவிகிதம்  செஸ் வரி வசூல்  செய்து நல வாரியத்தில் இணைக்க வேண்டும். சிறு பேக்கரிகள் வைத்து தொழில் செய்வது வருபவர்களிடம் முறையில்லா வரிகள் விதிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு  இதனைத்தொடர்ந்து நடை பெற்ற நிர்வாகிகள் தேர்வில், ஹோட் டல் சங்கத்தின் கௌரவ தலைவ ராக எ.எல்.ராஜா, மாவட்ட தலைவ ராக கே.மனோகரன், பொதுச் செய லாளராக கே.சந்தோஷ்,  பொருளாள ராக பி.தங்கராஜ் உள்ளிட்ட 16 பேர்  கொண்ட நிர்வாகக்குழு  தேர்வு செய் யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட பொருளா ளர் ஆர்.வேலுசாமி உரையாற்றி னார். முடிவில் கே.ராமலிங்கம் நன்றி  கூறினார்.