கோவை, மார்ச் 15- கோவை விமான நிலையத்தில் 47 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய் யப்பட்டதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய நியாயம் கேட்டும், சிஐடியு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம், பூனேவை தலை மையிடமாக கொண்ட அனுமன் கெய்க்வாட் என்பவருக்கு சொந்தமான பி.வி.ஜி என்ற நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 140 விமான நிலையங்களில் தூய்மைப் பணி யாளர்களை பணியமர்த்தியுள்ளது. அந்த வகையில் பி.வி.ஜி நிறுவனத்தின் கீழ் கோவை விமான நிலையத்தில் சுமார் 150க்கும் மேற் பட்ட தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழி லாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பி.வி.ஜி நிறுவனம் 45 வயதை கடந்த 47 தூய்மைப் பணியாளர்களை திடீ ரென பணி நீக்கம் செய்துள்ளது. இதனைய டுத்து சிஐடியு சார்பில் கோவை விமான நிலைய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஒன்றிய விமானத்துறை அமைச்சரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும் என விமான நிலைய நிர்வாகம் கை விரித்தது. இந்நிலையில் பி.வி.ஜி நிறுவனத்தின் தொழி லாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து வியாழனன்று தூய்மைப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோல்டு வின்ஸ் கிளைச் செயலாளர் சுப்பிரமணி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகர், பொருளாளர் சபரி கிரிதாஸ், சிபிஎம் சூலூர் இடைக்குழு நிர் வாகி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பிவிஜி நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிராக முழக்கங் களை எழுப்பினர்.