கோவை, மே 23- மின் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் சார்பாக கோவை, டாடாபாத் தலைமை மின்சார வாரியம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு கிளை செயலாளர் எம். மணிகண்டன் தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் ஊழியர்கள் சுமார் 10ஆயிரம் பேரை பணி யாற்றி வருகின்றனர். கேங்மேன் பணியாளர்கள் மின்சார வாரியத்தின் அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின் றனர். ஆனால் இந்த பணியாளர்களுக்கு முறையான ஒப்பந் தத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்படுத்தித் தர நீண்ட நாட்களாக காலம் தாழ்த்தி வருவகிறது. விருப்பமாறுதல் (டிரான்ஸ்பர்) கேட்கின்ற பணியாளர்களுக்கு அந்தந்த ஊர் களில் பாரபட்சம் இன்றி பணியிட மாறுதல் வழங்க வேண்டும். தற்போது ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த சூழலில் மின்சார வாரியம் பணியாளர்களை ஆட் குறைப்பு செய்வதற்கு மின் ஊழியர்கள் சங்கத்தினை ஒப்பந்தத்தில் ஒத்துக் கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்துகிறது. பல ஆண்டுகளாக விடுமுறை நாட்களில் பேரிடர் காலங்களில் முன்னணியில் நின்று பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி ஊதிய உயர்வு, பணி உயர்வு ஆகியவை வழங்க வேண்டுமென வலியுறுத் தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாநில செய லாளர் டி.மணிகண்டன், மண்டல செயலாளர் கோபால கிருஷ்ணன், மையக் கோட்ட தலைவர் ஆர்.காளிமுத்து, கோவை மாவட்ட பொருளாளர் சாதிக் பாஷா, தெற்கு கிளை தலைவர் கே.காளிமுத்து ஆகியோர் உரையாற்றினார். வடக்கு கோட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.