கோவை, டிச.5- ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உட னடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தமிழ கம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக் கான பேச்சுவார்த்தையை துவக்கி, உடனே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின்வாரி யத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை சிவானந்தகாலனியில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள், ரணதிவே, காளிமுத்து, கோபாலகிருஷ் ணன், மதுசூதனன் ஆகியோர் உரையாற்றி னர். இதில் திரளான மின் ஊழியர்கள் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.
தருமபுரி
இதேபோன்று, தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் தீ.லெனின் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் குமரவேல், கடத்தூர் கோட்ட செய லாளர் ஜெகநாதன், தருமபுரி கோட்ட தலை வர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஓய்வுபெற்றோர் அமைப் பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், திரளானோர் பங் கேற்றனர்.