திருப்பூர், ஜன. 10 - மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட் சிகளில் தூய்மைப் பணி, குடிநீர் வழங்கல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார்ம யத்தை திணிக்கும் அரசாணை 152, அர சாணை 139 ஆகியவற்றை கைவிட வலியு றுத்தி திருப்பூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன், மோட்டார் தொழி லாளர் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு, திரு முருகன் பூண்டி நகராட்சி 10ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுப்பிரமணியம் ஆகியோர் இந்த போராட்டத்தை ஆதரித் துப் பேசினர். இதில் மாநகராட்சி, நகராட்சிகளில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், வாகன ஓட்டு நர், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் உள்பட பல்வேறு வகையான அலுவலகப் பணிக ளைச் செய்து வரும் ஆயிரக்கணக்கான ஊழி யர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறி யாக்கும் அரசாணை 152, அரசாணை 139 ஆகி யவற்றை ரத்து செய்ய வேண்டும். தனி யார்மயக் கொள்கைகளைக் கைவிட்டு இந்த பணியாளர்களுக்கு அரசாணை 62 (2டி) படி ஊதியம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்ய வும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. தனியார்மய அரசாணையைக் கைவிட்டு, ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவல கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்து வோம் என்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத் தில் உள்ளாட்சி ஊழியர்கள் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.