கோவை, பிப்.5- கோவை விமான நிலையத்தில் 45 வயதை கடந்த 47 ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களை பணி நீக் கம் செய்ததை கண்டித்து, தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சிஐடியு அறிவித்துள் ளது. மகாராஷ்டிரா மாநிலம், பூனேவை தலைமையிடமாக கொண்ட அனுமன் கெய்க்வாட் என்ப வருக்கு சொந்தமான பி.வி.ஜி என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 140 விமான நிலையங்களில் தூய்மைப் பணியாளர்களை பணி யமர்த்தியுள்ளது. அந்த வகையில் பி.வி.ஜி நிறுவனத்தின் கீழ், கோவை விமான நிலையத்தில் சுமார் 150க் கும் மேற்பட்ட தூய்மைப் பணியா ளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பி.வி.ஜி நிறுவனம் 45 வயதை கடந்த 47 தூய்மைப் பணியா ளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இதனையடுத்து சிஐடியு சார்பில் கோவை விமான நிலைய நிர்வாகத் துடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஒன்றிய விமானத்துறை அமைச்சரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும் என விமான நிலைய நிர்வாகம் கை விரித்தது. இது குறித்து திங்களன்று கோவை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற, சிஐடியு பேரவைக் கூட்டத்தில், ஒன்றிய அமைச்சருக்கு தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்க விவ காரம் தொடர்பாக கடிதங்களை அனுப்புவது, தொடர்ந்து போராட் டங்களை முன்னெடுப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்தக் கூட்டத்தில் சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சாலைப்போக் குவரத்து சம்மேளனத்தின் மாவட் டத் தலைவர் ராஜசேகர், மார்க் சிஸ்ட் கட்சியின் கிளைச் செய லாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.