சேலம், மார்ச் 20 - தமிழ்நாடு பாலர் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் சங்க மத் திருவிழா சேலம் சுனில் மைத்ரா நினைவகத்தில் நடை பெற்றது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ராஜாத்தி தலை மையில் நடைபெற் நிகழ்வில், ஒருங்கிணைப்பு குழு உறுப்பி னர்கள் எம்.கற்பகம் வி. லட்சுமி எஸ் கோகிலா முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் கே. ஜோதிலட்சுமி பாலர் பூங்காவை துவக்கி வைத்தார். அமைப் பின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் என்.அமிர்தம் உரையாற்றினார். குட்டி கதைகள் சொல்ல திரைக்கவிஞர் மதியழகன், பாடல்களைப் பாடினார். இதில், அறிவியல் விளையாட்டு, மேஜிக் ஆகியவைகள் செய்து கட்டப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க கா.செல்வகுமார், வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் எம்.வெற்றிவேல், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.வைரமணி, ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். முடிவில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜி. கவிதா நன்றி கூறினார். இதில், எண்ணற்ற பாலர் சங்க சிறுவர் சிறுமிகள் பங்கேற்றனர்.