திருப்பூர், அக். 16 - போர் வேண்டாம், போர் இல்லாத சமுதாயம் வேண்டும் என வலியுறுத்தி பாலர் பூங்கா அமைப்பு சார்பில் கை அச்சு பதிக்கும் இயக்கம் தொடங்கப் பட்டது. திருப்பூர் எஸ்.வி.காலனி பகத்சிங் சிலம்ப பயிற்சி மையத்தில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாலர் பூங்கா வடக்கு பகுதி தலைவர் ரகுநாதன் தலைமை வகித்தார். இதில் இஸ்ரேல் மற்றும் பாலஸ் தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடைபெறும் போரை உடன டியாக நிறுத்த வேண்டும். அப்பாவி மக் கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். போர் இல்லாத சமுதாயம் வேண்டும் என்று வலியுறுத்தி குழந்தைகளிடம் கை அச்சு பதிக்கும் இயக்கம் தொடங்கப்படு கிறது என மாவட்டத் தலைவர் ராம மூர்த்தி தலைமை உரையாற்றினார். புல வர் வே.நாகராஜ் கணேஷ்குமார் போர் இல்லாத சமுதாயத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். இதில் மிகப்பெரிய வெள்ளைத் துணியில் பல வண்ண மைகளில், குழந் தைகள் போர் வேண்டாம், போர் இல் லாத சமுதாயம் வேண்டும் என வலி யுறுத்தி தங்கள் கை அச்சுக்களை பதிவு செய்தனர். 43 குழந்தைகள் உள்பட சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் வரை திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் பாலர் பூங்கா அமைப்பு சார்பில் போர் வேண்டாம் என இதுபோல் கை அச்சு பதிவு செய்யும் இயக்கம் நடத்துவது, அனைத்து கை அச்சு பதிவு செய்த பதாகைகளையும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவது என்றும் தீர்மானித்துள்ளனர். இந்த இயக்கத்தின் நிறைவாக மாவட்ட செயலாளர் சந்துரு நன்றி கூறி னார்.