districts

img

மாட்டுவண்டியில் பயணித்து குழந்தைகள் மகிழ்ச்சி

நாமக்கல், ஜன.13- குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும்  தனியார் பப்ளிக் பள்ளியில், பொங்கல் பண்டி கையையொட்டி, மாட்டுவண்டியில் பயணம் செய்து குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு அலுவலகங்கள், தனியார் அலு வலகங்கள், அரசு கல்லூரி மற்றும் பள்ளிகள் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பொங் கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட் டம், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி, பிசி யோதெரபி, பார்மசி, நர்சிங் மற்றும் எக்ஸெல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட னர். தமிழர்களின் பாரம்பரிய கிராமிய நட னங்களான தப்பாட்டம், ஒயிலாட்டம், கர காட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இரண்டு சக்கர வாகனம் மற்றும் சொகுசு கார்களிலேயே பயணம் செய்த சிறு வர் சிறுமிகளுக்காக, ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த மாட்டுவண்டியில் ஏறி சிறுவர் சிறுமி கள் பள்ளி விளையாட்டு மைதானத்தை முழு வதுமாக சுற்றி வந்தனர். மாட்டு வண்டியில் ஏறி சுற்றி வருவதற்கு சிறுவர் சிறுமிகள் போட்டி போட்டுக் கொண்டது, காண்போரை மகிழ்ச்சி அடையச் செய்தது.