திருப்பூர், ஜன.16- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய குழு சார்பாக, பகத்சிங் சிலம்பு பயிற்சி பள்ளியை இந்திரா நகர் மைதானத்தில் மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி திங்க ளன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில், வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ். பாரதி மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் சிறப்புரையாற்றி னார். பயிற்சியாளர் அருணாச்சலம், ஒன்றிய தலைவர் ரேவந்த் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கேசவன், ஜெயக் குமார், பகத்சிங் சிலம்பக்குழு ஒருங்கிணைப்பாளர் கிஷோர், பரத், மாணவி ரிதன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.