பென்னாகரம், டிச.13- ஒகேனக்கல்லில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் குறித்து, சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் காக்கர்ல உஷா ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, மெயின் அருவியில் குளித்தும் பரிசலில் பயணம் செய்தும் செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, சுற்றுலாத்துறை சார்பாக ஒகேனக்கலில் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் குறித்து புதனன்று காலை தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் காக்கர்ல உஷா நேரில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், சுற்றுலா துறையின் சார்பில் இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் தருமபுரி சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன், செயற்பொறியாளர் ரவி, ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.