தருமபுரி, செப்.17- பாலக்கோடு வட்டம், சின்னாறு அணை இலங்கை தமிழர்கள் முகா மில் கட்டப்பட்ட புதிய வீடுகளை வேலூரிலிருந்து காணொளி வாயி லாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் ஞாயிறன்று திறந்து வைத்தார். வேலூரிலிருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச் சியில் தருமபுரி மாவட்டம், பாலக் கோடு ஊராட்சி ஒன்றியம், சின்னாறு அணை இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு முகாமில் ரூ.2.51 கோடி மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 குடியிருப் புகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இத னைத்தொடர்ந்து சின்னாறு அணை இலங்கை தமிழர் முகாமில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி கலந்து கொண்டு, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளுக்கான ஆணை களை வழங்கினார். இதன்பின் குடியி ருப்புகளை பார்வையிட்டார். சின்னாறு அணை இலங்கை தமி ழர்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.251.30 லட்சம் மதிப்பீட்டில் 50 குடியிருப்பு களுடன், ரூ.24.05 லட்சம் மதிப்பீட் டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி யுடன் வீடுதோறும் குடிநீர் இணைப்பு கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.13.44 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர்க் கால் வாய், ரூ.3.07 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குகள், ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு மின் இணைப்பு, ரூ.7.25 லட்சம் மதிப்பீட் டில் 50 எண்ணிக்கையிலான உறிஞ்சு குழி மற்றும் ரூ.16.25 லட்சம் மதிப் பீட்டில் தெருக்களுக்கு பேவர் பிளாக் குடன் கூடிய சாலை வசதி உள்ளிட்ட ரூ.67.21 லட்சம் மதிப்பீட்டிலான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் வெ.தீபனா விஸ்வேஸ்வரி, வட்டாட் சியர்கள் ராஜா, வெண்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன், பஞ்சப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் நாராயணசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட் டம், பவானிசாகர் முகாமில் ரூ.21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 420 வீடுகளை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.