districts

img

வாலிபர் சங்கம் சார்பில் சிறார்களுக்கு சதுரங்க போட்டி

நாமக்கல். ஏப்.20- நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளை யம் தெற்கு ஒன்றிய குழு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், காவேரி ஆர்.எஸ்.புதுப்பாளையம் கிளை சார்பில், சிறார் களுக்கு சதுரங்க விளையாட்டு போட்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் எம். லட்சுமணன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க நிர்வாகி பூபாலன் முன்னிலை வகித்தார். திமுக ஒன்றிய செய லாளர் யுவராஜ், ஆலாம்பாளையம் பேரூ ராட்சி செயலாளர் கார்த்திக் ராஜா,  சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், வாலிபர் சங்கம் முன்னாள் மாவட்டத் தலைவர் ரவி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.