உடுமலை, ஜூன் 28- சாதியின் பெயரில் சக மனிதனை இழிவு படுத்துவதற்கு எதி ராகவும், சேரன்மாதேவி போராட்ட வரலாறுகளை நினைவு கூறும் விதமாகவும் உடுமலை வெங்கிடகிருஸ்ணா சாலை யில் புதனன்று வைக்கம் - சேரன்மாதேவி போராட்ட நினைவு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செய லாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பொது கூட்டத்தில், அமைப்பின் பொது செயலாளர் கு.இராமகிருட் டிணன் மற்றும் ஆவணப்பட இயக்குனர் பேராசிரியர் சாரோன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நகரத் தலைவர் யாழ் நடராஜன் முன்னிலை வைத்தார். மேலும் இந்த பொதுக்கூட் டத்தில் திமுக நகர செயலாளர் வேலுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தண்டபாணி, காங்கிரஸ் கடசியின் நகர தலைவர் ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.