கோவை, பிப்.15- மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை எச்ச ரித்துள்ளனர். கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக மருதமலை அமைந்திருப்பதால் வனவிலங் குகள் கோவில் படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழி யாக அடிக்கடி கடந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்க ளின் பாதுகாப்பு கருதி மலை அடிவாரம், படிக்கட்டுகள், கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், மரு தமலை கோவில் வளாகம் அருகே ஒரு சிறுத்தை சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற பக்தர் ஒரு வர் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதி விட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகி றது. மருதமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பக்தர் ஒருவர் காரில் செல்லும்போது மலைப்பாதை யின் முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. இதனை அவர் படம் பிடித்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மருத மலை கோவிலில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட் டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.