சேலம், ஜூலை 11- ஒன்றிய அரசின் ஜல்சக்தி மிஷன் திட்டத்தில், குடிநீர் இணைப்புக்கு ஊராட்சி அமைப்புக்கு கட்டணம் செலுத்த வலியுறுத்துவதை திரும்ப பெற வேண்டும் என திங்களன்று நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க எடப்பாடி தாலுகா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மாதர் சங்கத்தின் எடப்பாடி தாலுகா பேரவை கூட்டம் வெள் ளாண்டிவலசு சங்க அலுவலகத்தில் தாலுகா தலைவர் எம். தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி, மாவட்ட பொருளா ளர் என்.ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய அரசின் ஜல்சக்தி மிஷன் திட்டத்தில், குடிநீர் இணைப்புக்கு ஊராட்சி அமைப்புக்கு ரூ.3440 கட்டணம் செலுத்த வலியுறுத்துவதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் எடப்பாடி தாலுகா தலைவராக எம்.தனலட் சுமி, செயலாளராக எம்.பூங்கொடி, பொருளாளராக கே.ரேகா உள்ளிட்ட 9 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்ப ட்டனர்.