கோவை, டிச.30- இரவு நேர ரயிலாக உதய் ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்திட வேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை - பெங்களூர் இடையிலான “வந்தே பாரத்’’ ரயில் சேவை துவக்க விழா சனியன்று நடைபெற்றது. ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்த ரயில் திருப் பூர், ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். வந்தே பாரத் ரயில் சேவை துவக்க நிகழ் வையொட்டி கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை வாழ்த்தி உரையாற்றினார். அவர் பேசும் போது, கோவையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு ரயில் சேவைகள் ஏறத்தாழ ஒரே நேரத்தில் இயக்கப்படுகிறது. எனவே கோவை - பெங்களூர் உதய் எக்ஸ் பிரஸ் ரயிலை இரவு நேர ரயில் சேவை யாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட் டுக் கொண்டார். மேலும் புதிய ரயில் சேவை துவக்கும் தெற்கு ரயில்வே நிர்வா கத்துக்கு தனது வாழ்த்துகளை தெரி வித்துக் கொண்டார். தொடர்ந்து இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில் சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுன், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி ரயில் நிலையத்தில் பாஜகவினர் அலப்பறை
கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் தரும புரிக்கு வருவதையொட்டி, ரயில்வே நிர்வா கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச் சியில் ரயில்வே உயரகாரிகள், மக்கள் பிரதி நிதிகள், ரயில்வே பயணிகள் நலச்சங்கத் தினர் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந் தைகள் பங்கேற்றனர். அப்போது, ரயில் வேத்துறை சார்பில் நடைபெறும் இந்நி கழ்ச்சிக்கு பாஜகவினர் தன் சொந்த கட்சி நிகழ்ச்சி போன்று, கட்சி கொடியுடன் சுமார் 50 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரயில் வருவதற்கு முன்பே வரவேற்பு நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், பாஜகவி னர் “மோடி ஜி வாழ்க, ஜெய் ஸ்ரீராம் வாழ்க, ஜெய்காளி வாழ்க” என கோஷம் எழுப்பி அலப்பறை செய்தனர். மேலும், மாணவி களின் கலைநிகழ்ச்சியில் ராமர், முருகன் பாடல்களை மட்டும் பாடவைத்தனர். இதனைத்தொடர்ந்து வந்தே பாரத் ரயில், தருமபுரி ரயில் நிலையத்திற்கு வந்து போது சிறப்பு விருந்தினர்களை கொடிய சைத்து வரவேற்க விடாமல், அவர்களை பின்னுக்கு தள்ளிய பாஜகவினர், தங்கள் கட்சி கொடிகளை அசைத்து கூச்சலிட்ட னர். ரயிலில் வந்த பயணிகளை இறங்கவி டாமலும், ஏறாவிடாமலும் தடுத்தனர். மேலும், ரயிலை காண வந்த பொதுமக்க ளையும், குழந்தைகளையும் பின்னுக்கு தள்ளிய பாஜகவினர் நடைபாதை முன்பும், ரயில் தாண்டவாளத்தில் இறங்கி, செல்பி எடுத்தும் கூச்சலிட்டனர். ரயில்வே துறை ஏற் பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியை, முறை யாக நடத்தவிடாமல் பாஜகவினர் கூச்ச லிட்டு அலப்பறை செய்த நிகழ்வு, அங்கி ருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிக ளிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.