சென்னை, ஆக. 9- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 10ஆம் தேதி இரவு 11.25, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்ப டும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.00, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் செங்கல் பட்டில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்ப டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.