districts

விண்ணில் அறிவியல் சார்ந்த செயற்கோள்கள்

உதகை, பிப்.10- அறிவியல் சார்ந்த செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் பெறப்ப டும் தகவல்கள் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்தது வருகிறது என சந்திராயன் 3  திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி யில் விண்வெளியில் இந்தியா என்ற  தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற் றது. இதில், அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடை பெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின், சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் செய்தியாளர்களிடம் கூறு கையில், ஊரகப் பகுதிகளில் உள்ள  அரசு மற்றும் ஊரக பள்ளி மாணவர் களை ஊக்கமளிக்கும் வகையில் இந்நி கழ்வு நடைபெறுகிறது. விண்வெளி  மற்றும் சந்திராயன் திட்டங்கள்  குறித்து அறிந்து கொள்ள மற்றும்  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ சார்பில் ரிமோட் சென்சிங்,  தகவல் தொடர்பு, வானிலை மற்றும்  ஜி.பி.ஆர்.எஸ், சூரியன் ஆகியவற்றை ஆய்வு செய்ய கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண் ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவற் றின் மூலம் பெறப்படும் தகவல்கள் மக்க ளின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது.  சந்திராயன் 3 செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர் அடங்கியது. இதன் ஆயுட்காலம் ஒரு லூனார் நாளா கும். தற்போது அதன் ஆயுட்காலம் முடி வடைந்து விட்டது. அந்த செயற்கைக் கோள் எந்த நோக்கத்திற்காக விண் ணிற்கு செலுத்தப்பட்டதோ அந்த நோக் கம் முழுமையாக நிறைவேறியுள்ளது. இந்தத் திட்டத்தில் மற்றொரு சாதனை யாக லேண்டர் எந்த இடத்தில் தரை யிரக்கபட்டதோ அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு அதே எஞ்சின் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரை யிறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன் படுத்தப்பட்ட ஆர்பிட்டர் நிலவின் சுற்று வட்ட பாதையிலிருந்து மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டது. இதிலிருந்து பெறப்படும் தகவல்கள் பிற திட்டங்க ளுக்கு பயன்படுத்தப்படும், என்றார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரிமா சங்க நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.