சேலம், ஜூலை 20- சேலம் உருக்காலை வளாகத் தில் ராணுவத் தளவாட தொழிற் சாலை அமைக்குமாறு மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து வெள்ளியன்று சேலம் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங் கங்கள் பிரச்சார இயக்கம் ஜூலை 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் ஜங்சன், உழவர் சந்தை, ஐந்து ரோடு, மணக்காடு, புதிய பேருந்து நிலையம், பால் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சேலம் உருக்காலை வளா கத்தில் இதுவரை பயன்படுத்தா மல் உள்ள 1500 ஏக்கர் நிலத்தில் ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற் சாலை அமைக்க வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் – டீசல்- கேஸ் விலையை குறைத்திட வேண்டும். பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வேளாண் விலைப் பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சாரா இயக்கத்தில் சிஐடியு சாலைப்போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.வெங்கடபதி எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பொன்னி பழனியப்பன், கிருஷ்ண மூர்த்தி ஐஎன்டியூசி சார்பில் நட ராஜன், ஏஐடியூசி சார்பில் முருகன், எச்எம்எஸ் கணேசன், ராஜூ உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர் வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.