உடுமலை, டிச.23- சிஐடியு சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்பு பேரவைக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாநி லச்செயலாளர் கோபிக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். சிஐடியு சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புப் பேரவைக்கூட்டம் உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்றது. சிஐடியு கன்வீனர் வி.விஸ் வநாதன் தலைமை ஏற்றார். செயலாளர் எஸ்.ஜெகதீசன் வர வேற்று பேசினார். நிர்வாகிகள் எல்லம்மாள், கே.உன்னிகி ருஷ்ணன், கி.கனகராஜ் முன்னிலை வகித்தனர். மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி சிஐடியு மாநிலச்செய லாளர் கோபிக்குமார் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு முடிவுகளையும் உடனடி இயக்கங்கள் குறித்தும் திருப்பூர் மாவட்டச்செயலாளர் கே.ரங்கராஜ் விளக்கிப்பேசினார். இதில் சிஐடியு நிர்வாகிகள் ஜோசப், ஜெகானந்தா, ரத்தின சாமி, எஸ்.சுப்ரமணியம், சித்ரா, ராமலிங்கம், ஆசிப், ஓம்பிர காஷ், கார்த்திக், பாபு, விகேசி பாலு, பரிமளம், அய்யனார், புக்குளம் கனகராஜ், சிவசுப்ரமணியன் ராஜேந்திரன் உட்பட முன்னணி ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முடிவில் ஈஸ்வரன் நன்றி கூறினார்.