சேலம், மார்ச் 16- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சேலத்தில் புதனன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார் பில் மகளிர் தின விழா புதனன்று மாலை 4 மணியளவில் சேலம் சிவில் இன்ஜினி யர்ஸ் அசோசியன் அரங்கில் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்விற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருவரங்கன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வள்ளிதேவி வரவேற்பு ரையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத்தலை வர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். இந்நிகழ் வில், அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் குழு அமைப்பாளர் மா.ராணி, சேலம் மாநக ராட்சி துணை மேயர் சாரதாதேவி, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.