சேலம், ஆக.9- சர்வதேச பழங்குடியினர் தின விழா சேலத்தில் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம், சேலம் மாவட்ட மலைக்குறவன் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்கம் (பழங் குடியினர்), தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து உற்சாக மாக கொண்டாடப்பட்டது. சர்வதேச பழங்குடியினர் தின விழா சேலத்தில் உற்சாகமாக கொண்டாடப் பட்டது. முன்னதாக தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பா.விக்னேஷ் தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக் கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு அம்பேத்கர் சிலை முதல் காரல் மார்க்ஸ் சிலை வரை பேரணி நடைபெற்றது. பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா துவக்கி வைத்தார். பேரணி வின் சென்ட் வழியாக காரல் மார்க்ஸ் சிலையை வந்தடைந்தது. அங்கு சிறுவர், சிறுமியர் பங் கேற்ற சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியை சிலம்பாட்ட தேசிய நடுவர் எஸ்.முருகேசன் துவக்கி வைத்தார். பழங்குடியின மக்களின் இன் றைய நிலை சங்கத்தின் செயல்பாடு கள் குறித்து தமிழ்நாடு குறவன் பழங் குடி மக்கள் சங்க மாநில பொதுச்செய லாளர் ஏ.வி. சண்முகம், மலை குறவன் இனச்சான்று பெறுவதில் உள்ள இடை யூறுகள் களைவது குறித்து மலைக் குறவன் கல்வி மற்றும் பொருளாதாரம் முன்னேற்ற சங்க மாவட்ட துணைச் செயலாளர் டி.செந்தில்குமார், குறவர் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்த்திட நாம் செய்ய வேண்டிய பணி கள் குறித்து இளவெயினியார் பண் பாட்டுக் கலை இயக்கிய மையத் தலைவர் கோ.செல்வராசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய பொருளாளர் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு சர்வதேச பழங்குடியினர் தின சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம், சேலம் மாவட்ட மலைக்குறவன், பழங்குடியினர் கல்வி மற்றும் பொருளா தார முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.