கோவை, ஜூலை 15- முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மகத்தான தலைவருமான சங்கரய்யாவின் 102ஆவது பிறந்த நாளை சனியன்று கொண் டாடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கோவை 69ஆவது வார்டு ஆர்எஸ் புரம், காமராஜபுரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை கிளைச் செயலாளர் இளையராஜா ஒருங்கி ணைத்தார். எம்.எம்.ராஜன், வி.எஸ்.ராஜன், சலாம், கண்ணையன், பாலன் மற்றும் சுமைப்பணி ஆட்டோ சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் வடக்குப் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தோழர் சங்கரய்யாவின் 102ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.