கோவை, செப்.16- நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய கொள் ளையர்களை போலீசார் துரத்தி செல்வது கண்கா ணிப்பு கேமராவில் பதிவாகி யுள்ளது. கோவை புறநகர பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அடிக்கடி நடை பெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் நள்ளிரவில் சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 கொள்ளையர்களை விரட்டிப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது காவல் ஆய்வாளர் மாதையன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த காவல் ஆய்வாளர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தப்பிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். கொள்ளையர்கள் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத், செட்டிபாளையத்தில் வசித்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மணி ஐயப்பன் ஆகி யோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 14 சவரன் நகைகளை பறி முதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்களை போலீசார் தங்களது வாகனத்தில் துரத்திச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.